தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை வேலைவாய்ப்புகள் 2021
Tamil Nadu Hindu Religious and Charitable Endowments Department – TNHRCE Recruitment Notification 2021
வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பப் படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
திருச்சிராப்பள்ளி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், சமயபுரம், அருள்மிகு
மாரியம்மன் திருக்கோயிலில் நடப்பு கல்வி ஆண்டில் (2021-2022) ( 3 ஆண்டுகள் ) ஓதுவார்
பயிற்சி பள்ளி தேவார இசை ஆசிரியர், சங்கீத இசை ஆசிரியர் (குரலிசை ) பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | தபால் |
பணியிட விபரங்கள்:
1. தேவார இசை ஆசிரியர்
2. இசை ஆசிரியர்
கல்வித் தகுதி:
1. தேவார இசை ஆசிரியர்
i) 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) தேவார இசைத் துறையில் ஐந்து ஆண்டுகளுக்கு குறையாத தொழில்முறைப் பணியறிவு பெற்றிருத்தல் வேண்டும்.
2. இசை ஆசிரியர்
i) 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ii) தேவார இசைத் துறை மற்றும் சங்கீத துறையில், (குரலிசைத்துறை) ஐந்து ஆண்டுகளுக்கு குறையாத தொழில்முறைப் பணியறிவு பெற்றிருத்தல் வேண்டும்.
(அல்லது)
iii) மாநிலத்தில் உள்ள பல்கலைக் கழகம் / அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி நிறுவனம் மூலம் இசையில் (தேவாரம் /குரல்) சம்மந்தப்பட்ட பிரிவில் பட்டம் அல்லது பட்டயம் அல்லது தலைப்பு பெற்றிருத்தல் வேண்டும்.
வயது வரம்பு:
மேற்கண்ட பதவிகளுக்கு விண்ணப்பதாரர் 01.07.2021 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவராகவும், 35 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.
சம்பள விகிதம்:
மேற்குறிப்பிட்டுள்ள பணிகளுக்கு மாதம் ஒன்றுக்கு ரூ. 15,000/- தொகுப்பூதியமாக வழங்கப்படும்.
விண்ணப்ப கட்டணம்:
மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
வரப்பெறும் விண்ணப்பங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்டு தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அறிவிப்பு அனுப்பப்படும்.
நேரடி நியமனம் இந்து சமய அறநிலையத்துறை சட்ட விதிகளுக்குட்பட்டவை.
ராஜீஹத்தாலும் தெய்வீகத்தாலும் ஏற்படும் மாற்றங்களுக்கு நிர்வாகம் பொறுப்பல்ல.
நிபந்தனைகள்:
i) இந்து மதத்தைச் சார்ந்தவராகவும் தமிழ்நாட்டை சார்ந்தவராகவும் இருக்க வேண்டும்.
ii) தொற்றுநோய் உடல் அல்லது மனநிலை குன்றிய குறைபாடுகள் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியற்றவர்கள்.
iii) நீதிமன்றத்தில் தண்டனை அடைந்தவர்கள், பட்ட கடனை தீர்க்க முடியாதவர்கள் என் நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டவர்கள், அரசுப்பணிகள், பொது ஸ்தாபனங்கள் மற்றும் வேறு இடங்களில் பணிபுரிந்து தண்டனை காரணமாக பணி நீக்கம் செய்யப்பட்டவர்கள் ஆகியோர்கள் மேற்படி பணிக்கு விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.
iv) விண்ணப்பதாரர் நல்ல தேக ஆரோக்கியம் உள்ளவராக இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
i) விண்ணப்பதாரர்கள் ஒவ்வொரு பதவிக்கும் அந்தந்த பதவிக்குரிய கல்வி மற்றும் இதர தகுதி சான்றுகள் மற்றும் இதர விபரங்களுடன் தனித்தனியாக விண்ணப்பிக்க வேண்டும்.
ii) விண்ணப்பம் அனுப்பப்படும் மேலுறையின் மீது கண்டிப்பாக பதவியின் பெயர் குறிப்பிட்டு அனுப்பப்பட வேண்டும்.
iii) விண்ணப்பங்களுடன் அனுப்பப்படும் அனைத்துச் சான்றிதழ்களும் விண்ணப்பதாரர் கையொப்பத்துடன் புகைப்பட நகல்களாக மட்டுமே இருக்க வேண்டும். அசல் சான்றிதழ்களை அனுப்ப கூடாது.
iv) விண்ணப்பங்களுக்கு கட்டணம் கிடையாது. விண்ணப்பங்களை அருள்மிகு அருள்மிகு மாரியம்மன், சமயபுரம் திருக்கோயில் அலுவலகத்தில் நேரிலோ அல்லது இங்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று ஆன்லைன் மூலமாகவும் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள்: 30.11.2021 மாலை 5.00 மணி
30.11.2021-ம் தேதி மாலை 5.00 மணிக்கு பின்னர் வரப்பெறும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.
HRCE -ன் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தை காண (Official Website)
இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு (Official Notification) டவுண்லோடு செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ விண்ணப்பம் (Official Application Form) டவுண்லோடு செய்ய
இங்கே கிளிக் செய்யுங்கள்
விண்ணப்பம் சமர்பிக்க/ அனுப்ப வேண்டிய முகவரி:
இணை ஆணையர் / செயல் அலுவலர், அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் – 621 112
8 ஆம் வகுப்பு, நர்சிங், டிகிரி (MBBS) தகுதிகளுக்கு அருள்மிகு மாரியம்மன் திருக்கோயில், சமயபுரம், திருச்சிராப்பள்ளி மாவட்டம் இந்து சமய அறநிலையத்துறையில் (HRCE) வேலைவாய்ப்பு | விண்ணப்பிக்க கடைசி நாள்: 29 November 2021 விண்ணப்பிக்க
இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்று விண்ணப்பிக்க கடைசி நாள் வேலை வாய்ப்புகள்! – Today is the Last Day!