காஞ்சிபுரம் மாவட்டம் “சகி” பெண்கள் வள மையம் வேலைவாய்ப்புகள் அறிவிப்பு 2022
One Stop Center (OSC), Kancheepuram District Recruitment Notification 2022
Saki Women’s Resource Centre Kancheepuram District Recruitment Notification 2022
வாட்ஸ்அப் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
டெலிகிராம் குரூப்பில் சேர கிளிக் செய்யுங்கள்
முக்கிய குறிப்பு:
விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்ப படிவத்தை சமர்ப்பிக்கும் முன் இந்த அறிவிப்பை முழுவதும் கவனமாக படிக்கவும்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் “சகி” என்ற பெண்கள் வள மையத்தில் ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரிய தகுதி பெற்ற பெண் நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் தனியார் மற்றும் பொது இடங்களில், குடும்பத்தில், சமூதாயத்தில் மற்றும் பணிபுரியும் இடத்தில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவும் வகையில் “சகி” என்ற பெண்கள் வள மையம் One Stop Center (OSC) செயல்பட்டு வருகிறது. இம்மையத்தில் பணிபுரிய காஞ்சிபுரம் மாவட்டத்தில் நிரந்தர முகவரியைக் கொண்ட கீழ்கண்ட நிலைகளில் தகுதி பெற்ற பெண் நபர்களினை ஒப்பந்த பணியாளர்களாக தேர்வு செய்யப்படவுள்ளனர்.
வேலை வகை | தமிழக அரசு |
விண்ணப்பிக்கும் முறை | நேரடி (அ) தபால் |
பணியிட விபரங்கள்:
1. OSC மைய நிர்வாகி
2. மூத்த ஆலோசகர்
3. வழக்கு பணியாளர்
4. பல் நோக்கு உதவியாளர்
கல்வித்தகுதி:
1. OSC மைய நிர்வாகி
சமூகப் பணியில் முதுகலைப் பட்டம் (MSW), பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் குறைந்தபட்சம் 4 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம். (இது OSC உடன் இணைக்கப்பட்ட ஒரு குடியிருப்பு பதவி)
2. மூத்த ஆலோசகர்
சமூகப் பணி, ஆலோசனை உளவியல் அல்லது மேம்பாட்டு மேலாண்மை ஆகியவற்றில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். மற்றும் அரசு அல்லது அரசு சாரா திட்டங்கள் அல்லது திட்டங்களில் பெண்களுக்கு எதிரான வன்முறையில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவத்துடன், அதே அமைப்பிற்குள் அல்லது அதற்கு வெளியே ஆலோசனை வழங்கிய 1 ஆண்டு அனுபவம்.
3. வழக்கு பணியாளர்
சமூக பணியில் இளங்கலைப் பட்டம் (BSW), பெண்களுக்கு எதிரான வன்முறைகளில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் பணிபுரிந்த அனுபவம்.
4. பல் நோக்கு உதவியாளர்
விண்ணப்பதாரர் அலுவலக அமைப்பில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும், சமைக்கத் தெரிந்திருக்க வேண்டும். 24 மணி நேர சேவையை வழங்க அவர் ஷிப்ட்களில் வேலை செய்ய வேண்டும்.
5. பாதுகாவலர் (Security Guard)
8-ம் வகுப்பு தேர்ச்சி / 10-ம் வகுப்பு தேர்ச்சி (அ) தோல்வி மற்றும் விண்ணப்பதாரர் அலுவலக அமைப்பில் பணிபுரிந்த அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு:
01-01-2022 ஆம் தேதியின்படி அதிகப்பட்சம் 35 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
மாத ஊதியம்:
1. OSC மைய நிர்வாகி
மாத சம்பளம் ரூ. 30,000/-
2. மூத்த ஆலோசகர்
மாத சம்பளம் ரூ. 20,000/-
3. வழக்கு பணியாளர்
மாத சம்பளம் ரூ. 15,000/-
4. பல் நோக்கு உதவியாளர்
மாத சம்பளம் ரூ. 6,400/-
5. பாதுகாவலர் (Security Guard)
மாத சம்பளம் ரூ. 10,000/-
விண்ணப்ப கட்டணம்:
மேற்படி பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கட்டணம் எதுவும் இல்லை.
தேர்வு செய்யப்படும் முறை:
நேர்முகத்தேர்வு மூலம் தகுதியானவர் தேர்ந்தெடுக்கப்படுவர். தகுதி மற்றும் அனுபவத்தின் அடிப்படையில் நியமனம் அமையும். இது குறித்து அரசின் தேர்வு குழு முடிவே இறுதியானது.
விண்ணப்பிக்கும் அனைவரும் வழங்கும் தகவல்களின் அடிப்படையில் விண்ணப்பதாரர்கள் தங்களின் கல்வித்தகுதியில் பெற்றுள்ள மதிப்பெண்களின் சதவிகிதம் மற்றும் முன் பணி அனுபவம் ஆகியவற்றின் அடிப்படையில் தகுதியான நபர்களின் பெயர்கள் பட்டியலிடப்படும். அவ்வாறு பட்டியலிடப்பட்ட தகுதியான நபர்கள் மட்டுமே நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
நேர்காணலில் விண்ணப்பதாரர்கள் பெறும் மதிப்பெண்களின் அடிப்படையில் தகுதியின் வரிசையில் விண்ணப்பதாரர்களின் இறுதித் தேர்வு இருக்கும்.
தகுதி வாய்ந்த பட்டியலிடப்பட்ட நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கான அழைப்பு செய்தி அவர்களின் மெயில் ஐடி அல்லது பதிவு செய்த மொபைல் எண்ணிற்கு அனுப்பப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
மேற்காணும் பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ள விண்ணப்பதாரர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கில் சென்று விண்ணப்பத்தை டவுண்லோடு செய்து புகைப்படம் ஒட்டி நிரப்பி அத்துடன் தேவையான அனைத்து சான்றிதழ்களின் நகல்களை (xerox) சுயசான்றொப்பமிட்டு (Self Attested) இணைத்து சமர்ப்பிக்க வேண்டும்.
விண்ணப்பங்கள் நேரிலோ/தபால் மூலமாகவோ வரவேற்கப்படுகின்றன.
குறிப்பு:
மேற்குறிப்பிட்ட காலியாக உள்ள பதவிகளுக்கு, அதற்கு தகுதி உடையவர்கள் மட்டுமே விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தங்கள் சொந்த செலவில் நேர்காணலுக்கு அழைக்கப்படுவார்கள்.
நேர்காணலுக்கான தேதிகள் கடிதம் மூலம் பின்னர் அறிவிக்கப்படும். இதன் பொருட்டு எவ்வித கடிதப்போக்குவரத்தும் மேற்கொள்ளக்கூடாது.
காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பெண் விண்ணப்பதாரர்கள் மட்டுமே விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க கடைசி நாள்: 24-12-2021 மாலை 5:00 மணிக்குள்
விண்ணப்பம் அனுப்ப வேண்டிய முகவரி:
மாவட்ட சமூகநல அலுவலகம், மாவட்ட சமூக நலத்துறை, மாவட்ட ஆட்சியர் அலுவலகம், திருவள்ளூர் மாவட்டம்.
காஞ்சிபுரம் மாவட்டம் அரசு இணையத்தளம் (Official Dist Website) இங்கே கிளிக் செய்யுங்கள்
காஞ்சிபுரம் மாவட்டம் அரசு வேலைவாய்ப்பு இணையப்பக்கம் (Official Dist Career Webpage) இங்கே கிளிக் செய்யுங்கள்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு மற்றும் விண்ணப்பத்தை (Official Notification & Application Form) டவுண்லோட் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மத்திய அரசு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
8 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
10 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
12 ஆம் வகுப்பு வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
ஐடிஐ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிப்ளமோ வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
இன்ஜினியரிங் வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மாஸ்டர் டிகிரி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
மருத்துவத்துறை வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்
பி.ஹச்டி வேலைவாய்ப்புகள்
இங்கே கிளிக் செய்யுங்கள்